09 அக்டோபர் 2013

டேவிட் கமரூன் கடுமையான செய்தியை மகிந்த அரசுக்கு சொல்வாராம்!

டேவிட் கமரூன் கடுமையான செய்தியுடன் இலங்கை விஜயம் செய்கின்றார்பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடுமையான செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச தலைமைக்கு கடுமையான செய்தியொன்றை கமரூன் அறிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார். கனடா அமர்வுகளை புறக்கணித்துள்ள நிலையில் பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது.
எனவே, பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்பதனை நியாயப்படுத்தும் வகையில் கமரூன் கடுமையான செய்திகளை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்ல முற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் அமர்வுகளை நடாத்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக