13 அக்டோபர் 2013

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு!

உலகமெங்கும் படை நடத்தி வெற்றி கொண்டாடிய மாவீரன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் தமிழன் வாழ்ந்ததின் அடையாளமாக தஞ்சையில் உள்ளது.
இப்போது நமது இனம் வீழ்ந்ததன் அடையாளமும் தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் முற்றமாய்… வீழ்ந்தது எழுவதற்கே…
உலக வல்லாதிக்கமெல்லாம் ஓன்று கூடி எழுபதாண்டுகால ஈழவிடுதலையை வீழ்த்த இனப்படுகொலை 2009 இல் ஈழத்தில் செய்து இனத்தை வீழ்த்தியது. மாவீரர்கள் துயிலும் இல்லம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது ஈழத்தில்.
ஆனால் நமது அடையாளங்களை காக்க அமைக்கப்பட்டதே “முள்ளிவாய்க்கால் முற்றம்”. நமது இனம் பட்ட அவலத்தை கற்களில் ஓவியமாய் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது….
உள்ளத்தை உருக்கும் காட்சிகள்… காண்போர்கள் கண்ணீர் சிந்துவதை யாராலும் தடுக்கமுடியாது… வரும் நவம்பர் 8, 9, 10 நாட்களில் திறப்பு நிகழ்வு நடக்க இருக்கிறது… வாருங்கள் உறவுகளே தஞ்சைக்கு… இனம் காக்க மீண்டும் எழுவோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக