15 அக்டோபர் 2013

தோழர் தியாகு உண்ணாவிரதம் இன்றோடு நிறுத்தம்?

ஆரம்பத்தில் இருந்தே இந்தியா தனது பிடியை இலங்கை மீது இறுக்க நினைத்தாலும், அது சீனாவின் மீதுள்ள பக்தியினால் முரண்டு பிடித்தே வருகின்றது. இந்நிலையில் காமென் மாநாடு தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என பல முனைகளில் ஆய்வுகள், போராட்டங்கள் என நடந்து வருகின்றது.இந்தியா வழக்கம் போல் மவுனத்தை மட்டுமே பதிலாக அனைவருக்கும் வழங்கி வருகின்றது. ஆனால் அது நேற்று வரைதான் இன்று மன்மேகன் சிங் அவர்கள் கருணாநிதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா, தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் என்பதும், தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதை நேரடியாக தோழர் தியாகுவிடம் கேட்டால், அது காங்கிரஸ் அரசுக்கு கவுரவமாக இருக்காது என்ற நினைப்பில் இடையில் கருணாநிதியை ஆட்டத்தில் புகுத்தியுள்ளது காங்கிரஸ்.
ஒரு வழியாக இந்தியா பங்குபற்றாது என்ற நிலைப்பாட்டிற்கு வரலாம் என்றால் அது இயலாது, காரணம் இறுதி நேரத்தில் இலங்கை பேரங்களுக்கு அடிபணிந்தாலோ அல்லது தடாலடியாக காலில் விழுந்தாலோ எதாவது காரணம் சொல்லி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் வாய்ப்பும் உள்ளதுஅல்லது பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் பங்குபற்றுமாறு இந்தியா செய்யும்.
இலங்கை அப்படிச் செய்யவும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் இந்தியா புறக்கணித்தால் மேலும் சில நாடுகள் புறக்கணிக்கும் வாய்ப்பு தானாக உருவாகும் எனவே இலங்கை தனது நிலையில் இருந்து கீழ் இறங்க தயாராகவே இருக்கும்.
இதற்கிடையில் தமிழகத்தின் பல தலைவர்களின் கடும் அன்பினால் ஆன வேண்டுகோளுக்கு இணங்க, தோழர் தியாகு தனது உண்ணாவிரத்தை இன்று முடிவுக்கு கொண்டு வருவார் என தமிழக போராட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக