03 அக்டோபர் 2013

பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை-ஜீ.எல்.பீரிஸ்

இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
த கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, இலங்கை மீது சர்வதேச நாடுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகவும், மேற்குலக நாடுகளும், தமிழ் பிரிவினைவாத அமைப்புகளின் தகவலை மாத்திரம் கொண்டு, இலங்கை மீது பாரபட்சம் காட்டி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அரசாங்கம் உரிய செயற்பாட்டை முன்வைக்க தவறினால், சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சர், இலங்கை அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக