05 அக்டோபர் 2013

விக்னேஸ்வரனது பதவி ஏற்பை ரெலோ புறக்கணிக்க முடிவு!

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப் போவதாக டெலோ இயக்கம் அறிவித்துள்ளது. போர்க் குற்றவாளியாக கூட்டமைப்பினால் தேர்தல் காலத்தில் முன்மொழியப்பட்டவர் மகிந்த ராஜபக்ச.
அவர் முன்னிலையில் தமிழ் மக்களினால் ஏகோபித்த ஆதரவினால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சீ.வி.விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதனாலேயே டெலோவின் பொதுக்குழு நேற்று வவுனியாவினில் ஒன்று கூடி பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பதென தீர்மானித்துள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதனிடையே கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளும் இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைமை மஹிந்தரை சந்தித்தமை மற்றும் முதலமைச்சரை அவர் முன்னிலையினில பதவியேற்க திட்டமிட்டமை தொடர்பில் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தமிழரசு கட்சியிலும் சரவணபவன் மற்றும் சுமந்திரன் தவிர்ந்த ஏனையவர்கள் சம்பந்தனது நடவடிக்கைகளால் அதிர்ந்து போனாலும் , கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு செல்ல வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு தற்போது ஏற்பட்டு உள்ளதாகவும் எனினும் பொது செயலர் மாவை சேனாதிராசா இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக