04 அக்டோபர் 2013

கொடுமைகள் கண்டு கொதித்து எழுந்த இளைஞன் தான் தோழர் தியாகு!

தோழர்களே… 1960-களில் தஞ்சை மாவட்டத்திலே தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருந்த கொடுமைகள் கண்டு கொதித்து எழுந்த இளைஞன் தான் ‘’தோழர் தியாகு’’.
தலித்மக்களை தொடர்ந்து அடித்தும்,உதைத்தும்,சாணிப்பால் கொடுத்தும் கொடுமை படுத்திக்கொண்டிருந்த முத்துதங்கப்பா எனும் வெறி நாயை வெட்டி கொன்றுவிட்டு,14 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்தவர்.சாதிய கட்டுமானங்களை உடைத்து அந்த காலகட்டத்திலேயே ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்தவர்.மாக்சிய தளத்தில் ஊறிதிளைத்த ஒரு மாக்சிய அறிஞர்.மூலதனம் எனும் மாக்சிய பொக்கிசத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்.
தலித் மக்களோடு மக்களாக அதாவது தஞ்சையிலே தானும் ஒரு தலித்தாக வாழ்ந்து,அவர்களோடே கூலி விவசாயத்தில் ஈடுபட்டு உழைத்து வாழ்ந்தவர்.தியாகு சாதியத்தை மறுக்கும் ஒரு தூய தமிழர்.தமிழ்தேசியத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.தனித்தமிழ்நாடே தமிழின விடுதலை என்பதில் உறுதியாக கொண்டவர்.நக்சலைட் வாழ்க்கையிலும் சரி, தமிழ்த்தேசியவாதியாகவும் சரி பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்தவர்.”வெற்றி அல்லது வீரசாவு” என்று பட்டினி அறப்போர் தொடுத்துள்ளார்.3ம் நாள் இரவு 10 மணிவரை மன உறுதியுடன்,சோர்வில்லாமல் இருக்கிறார்.தோழரின் இந்த போராட்டம் வெற்றி அடைய பாடுபடுவோம்.

மு.களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக