10 அக்டோபர் 2013

சம்பந்தன்,விக்கி,சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிங்கக் கொடி குழு உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழின அழிப்புக்கு பொறுப்பான மகிந்த ராஜபக்சவுடன் உண்டு மகிழ்ந்து உறவாடுவதால் ஆத்திரமும் அதிருப்தியுமுற்றுள்ள முல்லைத் தீவு மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வெற்றியின் முதல் அறிவிப்பு முல்லைத் தீவிலிருந்தே அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கோசங்களை கோரிக்கையாக முன்வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குப் பிச்சை கேட்டு தேர்தலில் பெருவெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது. ஆயினும், தேர்தலில் வென்ற பின் முன்வைத்த கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாகவே, இனஅழிப்பாளர்களோடு கூடி குலாவி வருவதோடு இன நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்கள் மீதான கட்டமைப்பு சார் இனஅழிப்புக்கு துணைநிற்கிறது.
சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் நடவடிக்கையால் சில த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இதன் அடிப்படையிலேயே சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவாஜிலிங்கம் சிங்கக் கொடி குழு என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும் சிங்கக்கொடி குழுவுக்குமிடையில் பாரிய பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக