26 அக்டோபர் 2013

பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது!

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை யாழ். நகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை மற்றும் அதில் கலந்து கொள்ளும் நாடுகளை புறக்கணிக்க வில்லை எனவும் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டையே தமது கட்சி புறக்கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எனினும் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் சர்வதேச தலைவர்களுடன் மாநாட்டிற்கு வெளியாக தமது கட்சி சந்தித்து கலந்துரையாடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தலைவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக