
எனினும் அவர்கள் தம்மை அடையாளப்படுத்துவம் வகையிலான ஆவணங்களை தமக்கு சமர்ப்பிக்கவில்லையென்பதால் அத்தகைய தகவல்களை வெளியிட ஆசிரிய பீடம் மறுதலித்துள்ளது.இந்நிலையினில் குறித்த பத்திரிகையாளர்களது வதிவிடப்பகுதிகளில் குறித்த நபர்கள் தொடர்ச்சியாக நடமாடுவதாகவும் தகவல்களை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்த நிலையினிலேயே இப்புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களினில் பல பத்திரிகையாளாகள் கொல்லப்பட்டிருந்தமை மற்றும் காணாமல் போயிருந்தமை தொடர்பினில் அச்சமான சூழலே தொடர்கின்ற நிலையினில் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோத்தபாயவின் நேரடி வழி நடத்தலில் இயங்கி வரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பிரிவொன்று முன்னதாக நாவலர் வீதியினில் நமது ஈழநாடு பத்திரிகை அலுவலக கட்டிடத்தினில் தற்போது செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக