07 அக்டோபர் 2013

இன்றைய நாளை துக்க நாளாக அனுஷ்டிக்க கோரிக்கை!

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தாய்குலத்தை மானபங்கப்படுத்திய மகிந்த ராஜபக்ச முன் விக்னேஸ்வரன் சத்திய பிரமாணம் எடுப்பது, ஜனாதிபதியை போர்க்குற்றங்களில் இருந்து தப்புவிக்கும் நடவடிக்கை என்று புலம் பெயர் தமிழ்மக்களின் அமெரிக்கா அமைப்பான ஒபாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
சத்தியப்பிரமாணம் எடுக்கும் திங்கள் கிழமையை துக்க நாளாக அனுஸ்டிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு ஆமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தது, ஜனாதிபதியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேயன்றி, ஜனாதிபதியை காப்பாற்றுவதற்கு அல்ல என்றும், ஜனாதிபதி முன்னால் சத்தியப்பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல் என்றும், நம்பி வாக்களித்த மக்களை நடு ஆற்றில் விடும் நடவடிக்கை என்றும் இவ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம் என்று மார்தட்டி வீரம் பேசிய விக்னேஸ்வரனின் வார்தையை நம்பியே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்களே அன்றி, தமிழ் மக்களின் தன்மானத்தை அடகுவைத்து, தமிழ்ர்களை வெட்கி தலை குனிய வைப்பதற்கு அல்ல என்றும் புலம் பெயர் அமைப்புக்கள் கூறுகின்றன.
விக்னேஸ்வரன் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சமுன் தமிழர்களின் தன் மானத்தை அடகு வைத்து சத்தியப்பிரமாணம் செய்யும், வரும் திங்கள் (October 7) கிழமையை தமிழ் மக்கள் ஒரு துக்க நாளாக அனுஸ்டிக்கும் படி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கும் மானபங்கப்படுத்தப்பட்ட எமது தாய்க்குலத்துக்கும் நாம் செய்யும் அஞ்சலியாகும்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக