21 அக்டோபர் 2013

தடையை மீறி ஈரானிடம் எண்ணெய் வாங்குகிறது சிறிலங்கா!

ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ள போதிலும், மூன்றாவது தரப்பு மூலம், சிறிலங்கா தொடர்ந்தும் ஈரானிடம் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
இந்தநிலையிலேயே, அமெரிக்காவின் தடையையும் மீறி, அனைத்துலக கடற்பரப்பில் வைத்து, ஈரானிய மசகு எண்ணெயை, சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலமாக, வாங்கி வருகிறது.
சிறிலங்காவில் உள்ள சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில், ஈரானிய மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் வசதிகளே உள்ளன.
ஈரானிய மசகு எண்ணெய் சீராக கிடைக்காததால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை அடிக்கடி மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக