07 பிப்ரவரி 2014

கைதாகிய சிறுவர் போராளிக்கு 38வயதில் மரணதண்டனை!

விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக இன்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா சிவகந்தராசா (38வயது)என்பவருக்கே இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1990 ம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களினை விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சீனன் குடா கடற்படை தளத்தினை அண்மித்த பகுதியில் அவர் சிறைப்பிடிக்கப்பட்ட வேளை அவரது வயது வெறும் 14 மட்டுமேயாகும். சுமார் 14 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிட பணிக்கப்பட்டுமிருந்தார்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போதே அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கைதாகிய சிறுவர் போராளிக்கு 38வயதில் மரணதண்டனை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக