10 பிப்ரவரி 2014

காணொலி மூலம் கலந்துரையாடுகிறார் அமெரிக்க அதிகாரி!

சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின் ருசெல் அம்மையார், சிறிலங்காவில் உள்ள பெண் உரிமை செயற்பாட்டாளர்களுடன் இன்று காணொலிக் கலந்துரையாடலை நடத்தவுள்ளார்.
கத்தரின் ருசெல் அம்மையார், தெற்காசியாவுக்கான சுற்றுப் பயணத்தை கடந்த 4ம் நாள் ஆரம்பித்துள்ளார்.
அவர், சிறிலங்கா, நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இன்றும் நாளையும் (பெப்ரவரி10,11) சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகளுடனும், கலந்துரையாடவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அவருக்கு நுழைவிசைவு வழங்க மறுத்ததால், சிறிலங்காவில் உள்ள பெண்உரிமை அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், காணொலிக் கலந்துரையாடல் ஒன்றை நடத்த கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
நேபாளத்தில் இருந்தவாறு கத்தரின் ருசெல் அம்மையார் இந்த கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக அமெரிக்க தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக