18 பிப்ரவரி 2014

தூக்கு ரத்து தமிழர்கள் மகிழ்ச்சியில்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக் கக்கோரும் வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.மூவரின் தூக்குத்தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால் இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை உயர் நீதிமன்றில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கடந்த 4–ந் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் இவர்களது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.தூக்கு ரத்து செய்தி பரவியதும் தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக