28 பிப்ரவரி 2014

ஈ.பி.டி.பி.தொடர்ந்து குற்றம் செய்கிறது-அமெரிக்கா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
ஈ.பி.டி.பி. கட்சி வடக்கில் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவத்துள்ளது.
கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பல் கோரல்கள், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமை விவகார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி. போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கப் படையினருக்கும் தொடர்புகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினருடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக் குழுக்கள், யுத்த நிறைவின் பின்னரும் துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும், பிரதேசத்தில் ஆதிக்கத்தை செலுத்தவும் இவ்வாறு துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் வேட்பாளர் அனந்த சசிதரனின் வீட்டின் மீது ஈ.பி.டி.பி.யினர் இராணுவ சீருடையில் சென்று தாக்கியிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக