01 மார்ச் 2014

வன்முறையின் உச்சம் காங்கிரஸ்!

ஈழத்தில் இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வீர மரணம் அடைந்த திலீபனுக்கு விடுதலைப் புலிகளின் சார்பில் யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் பதினான்கு ஆண்டுகள் யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட திலீபனின் நினைவு இல்லம் சிங்களவர்களால் இடிக்கப்பட வில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் அமைக்க முடிவெடுத்த நேரத்தில், இந்திய காங்கிரஸ் அரசின் ஆலோசனையின் பேரில் திலீபனின் நினைவு மண்டபம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது . எனவே வன்முறைகளை தூண்டுவதும், சிலைகள், நினைவிடங்களை உடைக்கும் கலாச்சாரம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான
ஒன்று என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக