05 மார்ச் 2014

."அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானம்"மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து , தமிழர்களுக்கான நீதியை மறுத்து ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் அமெரிக்க ”அயோக்கிய” தீர்மானத்தை உலகத் தமிழர்களும், தமிழ் மாணவர்களும் மிக கடுமையாக எதிர்க்கிறோம்.
இலங்கை அரசுக்கு எதிரானது என்ற பெயரில் வெறும் ”உள்நாட்டு” விசாரணையை கோரும் தமிழீழ விடுதலைக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான இந்த அயோக்கிய தீர்மானத்தை தொடர்ந்து எதிர்ப்போம், எரிப்போம்.
தமிழர்களின் கோரிக்கையான, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நீதியாக
1) தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து,
2)இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை உடனே நடத்து
என்ற கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை மாணவர்களின் போராட்டம் இனப்படுகொலையில் பங்காற்றிய அமெரிக்க,இந்திய,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராகவும், அவைகளின் வணிக நிறுவனங்களுக்கு எதிராகவும் நடைபெறும்.
தமிழீழ தேசத்தை தங்களது பொருளாதார நலனுக்காக ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க,இந்திய, இங்கிலாந்து,இலங்கை ஆகிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக, அவைகளின் சதிகளை உடைக்க தமிழக மாணவர்கள் கிளர்தெழுவோம்.
அமெரிக்க தீர்மானம், ”அயோக்கிய” தீர்மானம்!!
போர்க்குற்றமல்ல, அது இனப்படுகொலையே!!
தமிழரின் தாகம்!! தமிழீழ தாயகம்!!
மாணவர்கள் அனைவரும் தமிழர் கடலருகே ஒன்றுகூடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக