24 மார்ச் 2014

யாழில் போராட்டம்:பல்கலை மாணவர்கள் கைது!

யாழ் நுண்கலைப்பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்தில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டமையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே, பொலிசே மாணவரை பொங்க வைக்காதே, பொலிசாரே சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக