27 மார்ச் 2014

தீர்மானத்திற்கு ஆதரவாக பல நாடுகள் இணைவு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவான நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, மொரிஷியஸ், மெசிடோனியா, மொன்டன்கரோ ஆகிய நாடுகளே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தன.எனினும், தற்போது இந்த எண்ணிக்கை 35 நாடுகளையும் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அல்பானியா, அஸ்ட்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரேஷியா, சைப்பிரஸ், டென்மார்க், இஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜோர்ஜியா, ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லைசட்டசைன், லித்துவேனியா, லக்ஸ்ம்பெர்க், மொரிஸியஸ், மொன்டன்கரோ, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, போர்த்துகல், ரொமானியா, செய்ன்ட் கீட்ஸ், நெவிஸ், சியரே லியோன், ஸ்லோவாக்கியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, மெசிடோனியா, அமெரிக்கா, பிரித்தானியா, வட அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இணை அனுசரணை வழங்கும் நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உறுப்பு நாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் இன்றைய தினம் தீர்மானம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை தொடர்பான தீர்மானம் இலகுவில் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக