30 மார்ச் 2014

இலங்கையின் மீது பொருளாதாரத் தடை-யாஸ்மீன் சூகா

இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக தாருஸ்மான் தலைமையில் நிறுவப்பட்ட நிபுணர் குழுவில் சூகாவும் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்பதனை குறிப்பிட முடியாத போதிலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச அதிகாரிகளுக்கான பயணத்தடை, வெளிநாட்டு முதலீட்டு தடை, சொத்து முடக்கம் போன்ற பல்வேறு வழிகளில் தடைகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சுயாதீன விசாரணைகளை இலங்கை ஜனாதிபதி நிரகாரித்தமை அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக