13 மார்ச் 2014

அண்ணாவை தாங்கோ என கதறிய சிறுமி கடத்தப்பட்டுள்ளார்!

காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளுமான குடும்பமொன்றினை இலங்கை படையினர் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக விஜயத்தின் போதும் கமருனின் விஜயத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா –வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது.
இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக எஞ்சிய தனது தாயுடன் முரசுமோட்டையினில் வசித்து வந்த குறித்த சிறுமியும் தாயுமே கடத்தப்பட்டுள்ளனர். எனினும் முன்னதாக படையினர் இளைஞன் ஒருவனை துரத்தி வந்ததாகவும் குறித்த இளைஞன் இவர்களது வீட்டினூடாகவே தப்பி ஒடியிருந்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்துள்ள படையினர் தாய் மற்றும் மகளை கடத்தி சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் துரத்தி வரப்பட்ட இளைஞர் யார் என்பது பற்றியோ அவர் எங்குள்ளார் என்பது பற்றியோ தகவல்கள் இல்லையென கூறப்படுகின்றது.குறித்த சிறுமியான விபூசிகா அண்மையிலேயே பெரியவளானதுடன் புலம்உறவுகள் சிலர் ஊடகவியலாளர்கள் ஊடாக அவளது கல்வியை தொடர வழி சமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக