28 மார்ச் 2014

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையில் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடாத்த அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த கால காயங்களை ஆற்றுப்படுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாடு திருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள காத்திருக்கும் இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றியாக நேற்றைய தீர்மானம் கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த அரசாங்கம் தவறிய காரணத்தினால் சர்வதேச விசாரணைகளை நடாத்த வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.இதுவரையில் இலங்கை அரசாங்கம் குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணை நடாத்த முன்வரவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக