14 மார்ச் 2014

கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு!

பரந்தன் - கிளிநொச்சிக்கு இடையில் அடையாள தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று கிளிநொச்சி பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.
இறந்தவர் புகையிரதத்தில் பயணிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகின்னறனர்.இறந்த உடலின் தலை பகுதி முழுமையாக சிதைந்து காணப்படுவதாகவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் திடீர் மரணவிசாரனை அதிகாரி கே.வி.கே.திருலோகமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக