25 பிப்ரவரி 2014

சர்வதேச விசாரணை அவசியம்-மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த கோரும், ஐ.நாவின் புதிய வலுவான அறிக்கையின்படி, அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரியுள்ளது.
சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்காதிருப்பது முற்றிலும் வெட்கக்கேடான செயல்.
நவநீதம்பிள்ளையின் சமீபத்திய அறிக்கை, மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு இனியும் காத்திருக்க முடியாது என்ற மற்றொரு அவசரமானதும் மற்றும் கசப்பான நினைவூட்டல் ஆகும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார்.
“அனைத்துலக சமூகத்தின் கண்களில் மண்ணை தூவி, கடந்த மனிதஉரிமை மீறல்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறல் முயற்சிகளை தடுப்பதற்காக சிறிலங்கா எல்லாவற்றையும் செய்தது.
இந்த அறிக்கை ஒரு கண் திறப்பதாக இருக்கும் என்பதுடன், வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக விசாரணை கோரும் ஒரு வலுவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
நவநீதம்பிள்ளையின் கண்டறிவுகள் எமது கருத்தை எதிரொலிக்கின்றன.
நாம் இன்னும் புதிய, நேரில் கண்ட சாட்சிகள் மற்றும், அரச படைகள் மற்றும் விடுதலை புலிகளின் பயங்கரமான மீறல்கள் குறித்த ஏனைய குற்றச்சாட்டுக்களையும் பெற்று வருகிறோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக