13 பிப்ரவரி 2014

பாலுமகேந்திரா மறைவு!பாரதிராஜா கதறி அழுதார்!


தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா, இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களும், திரையுலகினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்னம்,பாலா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, அமீர், சேரன், சீமான், ஆர்.சி.சக்தி, ராம், விக்ரமன், வி.சேகர், வசந்த், தங்கர்பச்சான், கேயார், பாண்டிராஜ், சிம்பு தேவன், சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர்கள் விவேக், பார்த்திபன், பாண்டியராஜன், கருணாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், ரமேஷ்கண்ணா, ஸ்ரீகாந்த், வையாபுரி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப் பாளர்கள் கணேஷ்(சங்கர்), எஸ்.ஏ.ராஜ்குமார், கவிஞர்கள் வைரமுத்து, பழனிபாரதி, சினேகன், மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், நீங்கள் கேட்டவை படங்களில் நடித்த நடிகை அர்ச்சனா, பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கேயே இருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜா, துக்கம் தாளாமல் கதறி அழுதார். அவரை மகேந்திரன், சேரன், ராம், ஜி. ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் தேற்றினர்.

நன்றி:நக்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக