03 பிப்ரவரி 2014

தூதுவர்களை சந்திக்கும் பீரிசின் முயற்சி தோல்வி!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு எதிராக, ஆதரவு திரட்டும் நோக்கில், புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், கொழும்பில் தூதரகத்தை கொண்டிராத நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு கோரத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசுடனான இந்தச் சந்திப்புக்கு, புதுடெல்லியில் உள்ள பெரும்பாலான நாடுகளின் தூதரகங்களில் இருந்து, இரண்டாவது அல்லது மூன்றாவது நிலை அதிகாரிகள் தான் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தை, பெரும்பாலான நாடுகளின தூதுவர்கள் புறக்கணித்து விட்டது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக