04 பிப்ரவரி 2014

பிரித்தானியாவுடன் அமெரிக்கா பேச்சு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் பேச்சு நடத்தியுள்ளன. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயரை சந்தித்துள்ளார். லண்டனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தது என ஸ்வார் தெரிவித்துள்ளார். எவ்வாறான தீர்மானம் கொண்டு வருவது நாடுகளின் ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக