12 பிப்ரவரி 2014

தமிழ் தம்பதிகள் தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் விசாரணை!

பிரித்தானிய பிரஜைகளான தமிழ்த் தம்பதிகள், சென்னையில் கடத்தப்பட்டது தொடர்பாக, ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் சென்னையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி சென்னை விமான நிலையத்தில் தவராஜ் (59), சலஜா(55) ஆகிய பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழ் தம்பதியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். இவர்களை விடுவிப்பதற்கு 2.5 கோடி ரூபாய் பணயத் தொகை கேட்கப்பட்டது. இந்தக் கடத்தல் தொடர்பாக தமிழக பொலிஸார் 13 பேரைக் கைது செய்துள்ளனர். அதேவேளை, இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய அஜந்தன் மற்றும் ரமேஷ் ஆகிய இலங்கைத் தமிழர்களைஇங்கிலாந்தின் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிக்க ஸ்கொட்லன்ட்யார்ட் சிறப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த கிரெய்க் மேகி, மார்க் ஹியுக்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவின் சஞ்சய் மெய்னி ஆகிய மூவரும் புதுடெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதிநிதி ஒருவருடன் இணைந்து நேற்று தமிழக பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஜார்ஜை சந்தித்தனர். இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகள், மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்காக இவர்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக