23 நவம்பர் 2012

அமைதிபேச்சு வார்த்தைதான் இனப்படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது!

போர் என்பது அமைதிபேச்சு வார்தை முறிந்ததால் வந்த ஒன்று அமைதிபேச்சுவார்த்தையும் அதில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும் பன்னாடுகள் காக்கதவறியதால் வந்தது போர்.பன்னாட்டு தலையீடு இல்லை என்றால் தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்திருக்காது என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணில் அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தமிழர்களை காப்பதற்கு என்று ஒருகாவல் அணிஇருந்தது ஒருபடை இருந்தது அதுஇருந்திருக்கும் இந்த இனப்படுகொலை என்பது இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது அமைதி ஒப்பந்தம் என்பது இந்த இனப்படுகொலை செய்வதற்கான முகாந்தரமாகத்தான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.
ஏன் என்றால் உன்னை நம்பி வருகிறேன் உனக்காக சில மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கிறேன் என் எதிரியுடன் சமரசத்தை மேற்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு சமாதானத்தில் இருக்கும் காலகட்டத்தில் உன் எதிரியை நீ பலப்படுத்தி என்னை பலவீனப்படுத்தி எதிரி என்னை தாக்கும் போது நீ பாத்துக்கொண்டு சும்மாய் இருப்பாய் என்றால் இந்த இனப்படுகொலை என்பது திட்டமிட்ட ஒன்று இதைத்தான் நாங்கள் எங்கள் ஒவ்வொரு கருத்துக்களிலும் முன்வைக்கின்றோம் என்றும் திருமுருகன் தெரிவித்துள்ளார். நாகரீகம் அடைந்த இந்த உலக்தில் ஒரு இனம் இனப்படுகொலையினை சந்திக்கின்றது என்றால் இது திட்டமிடப்பட்ட ஒன்று அமைதி ஒப்பத்தத்தின் முடிவுதான் போர் என்றால் அமைதி ஒப்பந்தந்தான் இனப்படுகொலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக