27 நவம்பர் 2012

ராஜீவ் காந்தியை இறுதிவரை புரிந்துகொள்ள முடியவில்லை-ராம் ஜெத்மலானி

புதுடெல்லியில் நடந்த விழாவில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பேசியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசு விருந்தினராக புதுடெல்லிக்கு வரவழைத்தார். அவருக்கு பொருளாதார உதவிகளை செய்தார். அதே சமயம், விருந்தினராக வரவழைத்து, எல்லா உதவிகளையும் செய்வோம் என்று நாம் உறுதியளித்ததற்கு மாறாக, தமிழர்களுக்காக போராடியவர்களை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தையும் அனுப்பிவைத்தோம். இது துரோகச் செயலாகும். இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நடத்தையை என்னால் இன்று வரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.
இவ்விழாவில் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? இலங்கை போரின் போது இந்திய இராணுவம் இலங்கை அரசுக்கு செய்த இராணுவ உதவிகள் என்ன? என்று விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி சென்ற முறை இந்தியா வந்த போது ம.தி.மு.க. தொண்டர்களுடன் அதை எதிர்த்து போராடினேன் மீண்டும் ஒருமுறை அவர் இந்தியா வந்தால் பிரதமர் வீட்டின் முன் போராட்டம் நடத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக