09 நவம்பர் 2012

வெலிக்கடை சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு - 5பேர் பலி! பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட 13பேர் படுகாயம்!


வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற கலகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த பிரதிப் பொலிஸமா அதிபர் ஆர்.டபிள்யு.எம்.சீ ரனவனவும் காயமடைந்துள்ளார். கைதிகள் கற்களையும் ஏனைய பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட படையினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.அதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாகவும் இதனால் ஐந்து பேர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன, கெழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக