08 நவம்பர் 2012

மனித சுனாமிகளை எதிர்கொள்ள தயார்-மகிந்த

வரவு – செலவுத் திட்டம்நாட்டின் அபிவிருத்திக்கு குழி வெட்டும் அதிகாரங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதை, வறுமையை இல்லாதொழிப்பதற்காக கொண்டுவரப்படவிருந்த திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
இவ்வாறான மனித சுனாமிகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய திறன் அரசாங்கத்துக்கு உள்ளது. நாட்டிலிருந்து வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் எம்முடன் கைகோர்க்குமாறு ஒருமனதோடு அழைப்பு விடுக்கிறேன்.
எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் வறுமையை போக்குவதே எமது குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - இன்று நாடாளுமன்றில் வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும்போது இறுதியாக தெரிவித்தார்.(நாட்டை வறுமை ஆக்கியதே நீங்கதானே அதிபரே!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக