01 நவம்பர் 2012

சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு!

சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு -மனித உரிமை மீறல்கள்கள் இப்போதும் தொடர்கின்றன -போருக்கான காரணங்கள் தீர்க்கப்படாதேயுள்ளது. இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் கூட ஒழுங்காக தீர்க்கப்படாதுள்ளது.இலங்கை பன்மைத்துவம் மிக்கதொரு நாடு என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள தயாராகவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார் மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் பகுதிகளில் இராணுவ மயப்படுத்தல்கள் நில அபகரிப்பு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்வென பிரச்சினைகள் நல்லாட்சிக்கான எவையுமே இங்கு அமுல்படுத்தப்படவில்லை.சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு தொடர்கின்றது.கடந்த கால மனித உரிமை மீறல்கள்கள் இப்போதும் தொடர்கின்றன எனவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
கடந்த கால தவறுகள் தொடர்பில் குற்றவாளிகள் இனங்காணப்படவேண்டும்.அத்துடன் வகை பொறுப்பு கூறப்படவேண்டும்.தேசிய மொழிக்கொள்கை அமுல்படுத்தப்படவேண்டும். ஆனால் அதை அமுல்படுத்த அரச கரும மொழிகள் ஆணைக்குழு தவறிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மொழிக்கொள்கையினை அமுல்படுத்த உள்ளுர் அமைப்புக்களையும் ஊடகங்களையும் ஒருங்கிணைப்பதெனும் தலைப்பில் இச்செயலமர்வு ஏற்பாடாகியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக