31 அக்டோபர் 2012

இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை",குணதாச அமரசேகர

திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாடு, மாகாண சபை முறைமை, திவிநெகும சட்டமூலம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
திவிநெகும தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த சட்டமூலம் பலவந்தமாக கொண்டு வரப்பட்டது. இதனை நீக்க எவருக்கும் அச்சமடைய தேவையில்லை. இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக