05 அக்டோபர் 2012

மட்டக்களப்பில் இரு இளம் பெண்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் இருந்து இரு பெண்களின் சடலங்களை இன்று பொலிஸார் மீட்டுள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை, அலியார்வட்டைப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து கோவில்போரதீவு பகுதியைச் சேர்ந்த ப.சுரேசினி (வயது 18) என்ற யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் உள்ள வளவொன்றினுள் இளம்பெண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும், புதைக்கப்பட்டிருக்கும் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கையில் வாழைச்சேனைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக