
இது பற்றி தெரிய வருவதாவது. தனது சொந்த சகோதரர்கள் இருவர் படகில் அவுஸ்திரேலியா சென்று சுமார் 50 நாட்களுக்கு மேல் ஆகியும் ௭துவித தகவலும் கிடைக்காத நிலையில் கவலைப்பட்டுக் கொண்டிருந்த மேற்படி சிறுவனின் தாயார் தமது கிராமத்திலுள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தை நோக்கி ‘‘அம்மாவே நீயும் ஒரு கருணை காட்டுகிறாய் இல்லை’’ ௭ன வேண்டியதைக் கேட்டுக்கொண்டிருந்த இளைய மகனான 16 வயது சிறுவன் அன்று இரவு ஆலயத்துக்குள் நுழைந்து பிரதான விக்கிரமான கண்ணகி அம்மன் விக்கிரகத்தையும் ஊர்வல விக்கிரத்தையும் அடித்து உடைத்துள்ளான்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தமை க்கு அமைய மேற்படி சிறுவனும் அவனது பெற்றோரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர். சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் அவனது தந்தை மேற்படி விக்கிரகங்களை (சிலை) புனரமைத்து தருவதாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து சிறுவன் விடுதலை செய்யப்பட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக