15 அக்டோபர் 2012

௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம்!

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன் தினம் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார்.
இவர் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ௭ரிக் சொல்ஹெய்மும் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற சமயம் சமாதானத் தூதுவராக கடமையாற்றிய ௭ரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவர்த்தைகளை நடத்திய பின்னர் புதுடில்லிக்கும் சென்று இந்திய அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தை தொடர்பில் விளக்கமளித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக