26 அக்டோபர் 2012

போப்- ஆண்டவரின் கையை பிடித்து முத்தமிட்ட மேர்வின் சில்வா!

சமீபத்தில், இராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கியதால் சிறையில் அடைக்கப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, வத்திக்கான் சென்று போப் ஆண்டவரை சந்தித்துள்ளார். பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவும் சர்ச்சைக்குரிய அவரது மகனும் சமீபத்தில் இத்தாலி சென்றுள்ளனர். அங்கே அவர்கள் வத்திக்கான் சென்று போப் ஆண்டவரைச் சந்தித்துள்ளனர்.
இதேவேளை மாலக சில்வாவும் மேர்வின் சில்வாவும் போப் ஆண்டவரின் கைகளை முத்தமிட்டனராம். செய்த பாவங்களைக் கழுவ இவ்வாறு செய்தார்களோ என்னவோ தெரியவில்லை என்கிறார்கள்.
சமீபத்தில் இராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதால், மாலக சில்வா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இராணுவ அதிகாரியில் தான் பிழை உள்ளதாகக் கூறி மாலக சில்வாவை விடுவித்து, குறிப்பிட்ட அந்த அதிகாரியை பொலிசார் கைதுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக