17 அக்டோபர் 2012

தெற்கில் இருந்து வடக்குக்கு மனித நேய நடை மேற்கொள்ளும் கனேடிய பெண்!

தெற்கில் இருந்து வடக்குக்கு மனித நேய நடை மேற்கொள்ளும் கனேடிய பெண்!ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் உற்பத்தி நிறுவனத்தின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கு நிதி சேகரிக்கின்றமைக்காக கனேடிய பெண் ஒருவர் தெற்கே தெய்வேந்திர முனையில் இருந்து வடக்கே பேதுரு முனை வரைக்கும் மனித நேய நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.இவரின் பெயர் ஒலிவியா அகஸ்ரின்.மனித நேய தொண்டர்.கொழும்பில் வசித்து வருகின்றார்.இவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி இந்நடைப் பயணத்தை ஆரம்பித்தார். எதிர்வரும் 18 ஆம் திகதி பயணத்தை நிறைவு செய்ய உத்தேசித்து உள்ளார்.இவர் புளியங்குளம், மாங்குளம், முருகண்டி, பரந்தன், பளை, வரணி ஆகியவற்றை நடந்து கடந்து நேற்று முந்தினம்  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.ஜெய்ப்பூர் நிறுவனத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய இவர் இப்பயணம் குறித்து விளங்கப்படுத்தி உள்ளார்.தெய்வேந்திர முனையில் இருந்து பேதுரு முனை வரைக்குமான தூரம் 800 கிலோ மீற்றர் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக