28 அக்டோபர் 2012

புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு அந்த அமைப்பின் சுவிட்சர்லாந்து இணைப்பாளர் பி.சிவநேசன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள தடையை நீக்குமாறு அவர் கோரியுள்ளார். சென்னை சட்டத்தரணி ராதகிருஸ்ணன் என்பவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1967ம் ஆண்டு சட்டவிரோத செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புலிகள் செயற்படவில்லை என இணைப்பாளர் சிவநேசன் சட்டத்தரணியின் ஊடாக தெரிவித்துள்ளார். சிவநேசன் புலிகளின் இணைப்பாளர் என்பதற்கும், ராதகிருஸ்ணன் அவரது சட்டத்தரணி என்பதற்கு என்ன ஆதாரங்கள் என இந்திய நீதமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிவநேசனின் கடவுச் சீட்டுப் பிரதி உள்ளிட்ட சில ஆவணங்களை இதன் போது சட்டத்தரணி ராதகிருஸ்ணன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 29ம் திகதி மதுரையிலும், நவம்பர் மாதம் 3ம் திகதி சென்னையிலும் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக