18 அக்டோபர் 2012

இலங்கைக்கு எதிராக 40கோடியை புலிகள் செலவு செய்ததாக சிங்கள செய்தித்தாள் சொல்கிறது!

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் யோசனையை நிறைவேற்றி கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு 40 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
கனடாவின் உள்ள புலிகளின் ஆதரவாளரான சட்டத்தரணி கெரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட 7 பேரும், பிரித்தானியாவில் செயற்படும் உலக தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் உட்பட 8 பேரும், பிரான்ஸில் உள்ள புலிகளின் சர்வதே வலைமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான வீ. கிருபாகரன், றொபர்ட் ஈவன்ஸ் தலைமையிலான 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே உள்ளிட்ட இருவரும், தமிழ் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் குழுவொன்றும் ஜெனிவாவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கான தங்குமிட விடுதி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடுன் பிரான்சில் இருந்து கடுதி தொடருந்தில் அழைத்து வரப்பட்ட 200 பேர் மற்றும் சுவிஸில் உள்ள 4 நகரங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 800 பேருக்காகவும் இந்த பணத்தை செலவிட்டுள்ளதாக திவயின கூறியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்த சுவிஸர்லாந்தில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த 11 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் ஜெனிவாவில் உள்ள புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவரின் மின்னஞ்சல் மூலம் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக