23 அக்டோபர் 2012

கேபி தங்கி இருக்கும் வீட்டருகே மக்கள் நடமாடத் தடை!

சிறிலங்கா அரசினால் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் கிளிநொச்சி வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதற்கும் தற்போது சிறிலங்கா அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் கைக்கூலியான கே.பி, தற்போது தமிழ்ச்செல்வனின் வீட்டில் குடியேறியுள்ளமை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்துள்ள காணியில் கே.பியின் தொண்டர் நிறுவன அமைப்பு ஒன்றுக்கான கட்டட நிர்மாணப் பணிகளுக்கு சிறிலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள்தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக