22 அக்டோபர் 2012

வீரமறவன் வீரப்பனின் எட்டாம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

Photo0081-600x450மலைவாழ் மக்களின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்த வீரப்பன் மறைந்து கடந்த 18 ஆம் திகதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வீரப்பனை பார்த்தார்கள்.
பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் இராபின் ஊட்டின் சாயலில் வீரப்பனின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்பதனை உலகறியும்.
நயவஞ்சகமாக மோரில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை தமிழக பொலிஸார் தாங்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடியதும் அனைவரும் அறிந்ததே.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மலைவாழ் பெண்களின் கற்புகளை தமிழக பொலிஸாரும், வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் சூறையாடினார்கள்.
இன்னும் அந்தப் பெண்களுக்கு எந்த விடிவும் கிட்டவில்லை.
இந்த நிலையில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமான வீரப்பன் மறைந்த எட்டாவது ஆண்டு தினத்தை அவரது சமாதியில் கன்னட தமிழ் சங்கம், மலைவாழ் மக்கள் நல்வாழ்வு சங்கம், தனி தமிழர் சேனை போன்ற தமிழர் அமைப்புக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டித்தனர்.
இந்த நிகழ்வில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக