27 அக்டோபர் 2012

இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கேள்வி!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் நடைமுறை தொடர்பிலான இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கேள்வி எழுப்பியிருப்பதாக நம்பகரமாக அறிய முடிகின்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்த போது நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதாக இலங்கை உறுதிமொழி வழங்கியிருந்ததன் பின்னணியில்இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம் நடைமுறைக்கு வந்திருந்தால் என்னென்ன விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றியும் இன்னும் எஞ்சியுள்ளவற்றை நடைமுறைப்படுத்த தேவைப்படும் காலம் என்பன குறித்தும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கையிடம் பேசியிருப்பதாக உயர்மட்ட அரச வட்டாரங்கள் கூறின.
அமெரிக்காவின் கோரிக்கைக்கமைய இலங்கை ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்து வருவதாகவும், வெகு விரைவில் அந்த அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் கையளிக்கப்படுமென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக