07 நவம்பர் 2012

போர்க் குற்றவாளிகளுக்கு ஒபாமா தண்டனை பெற்றுக் கொடுப்பார் - ராமதாஸ்

இலங்கை போர்க் குற்றவாளிகளுக்கு ஒபாமா தண்டனை பெற்றுக் கொடுப்பார் - ராமதாஸ்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட ஜனாதிபதி ஒபாமா 300க்கும் அதிகமான வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
அமெரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா அமெரிக்க இடையிலான உறவு தழைக்கவும், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவும், உலகம் முழுவதும் சமத்துவ சமுதாயம் மலரவும் ஜனாதிபதி ஒபாமா பாடுபடுவார் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக