26 நவம்பர் 2012

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை!

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை – பிரதம நீதியரசர்பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என பிரதம நீதிரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல்வாதிகள் தம்மை விசாரணைக்கு உட்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறியடித்து விசாரணைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விசாரணை நடாத்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சார்பற்ற சுயாதீனமான தரப்பினரிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதி விசாரணை நடாத்தும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அச்சமின்றி விளக்கமளிக்கப் போவதாக பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக