26 நவம்பர் 2012

மாவீரர் வாரத்தில் திருமலையில் புலி ஆதரவுச் சுவரொட்டிகள்! படையினர் அகற்றினர்!!

மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக திருமலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பாதுகாப்புப் படையினர் அகற்றியுள்ளனர்.
திருகோணமலை, உப்புவெளி ஆகிய இரு இடங்களில் இனந்தெரியாதோரால் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளையே பாதுகாப்புப் படையினர் இன்று திங்கட்கிழமை காலை அகற்றியுள்ளனர்.
தமிழீழ மாவீரர் தினம் நாளை செவ்வாய்க்கிழமை நினைவு கூறவுள்ளதை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பல பகுதிகளில் மாவீர்களை நினைவுகூரும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்றை அகற்றிய படையினர் கண்காணிப்பைப் பலப்படுதியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக