20 ஜூன் 2014

தேசியத்தலைவரின் தேவையை உணரும் முஸ்லீம் மக்கள்!

பிரபாகரன் இருந்திருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என தர்கா நகர் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தாயொருவர் கதறி அழுததாக வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.வன்முறை இடம்பெற்ற இடத்திற்கு சென்றபோது தன்னிடம் அந்த தாய் இவ்வாறு கூறி அழுததாக வடமகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.
இதன் மூலம் பிரபாகரன் மற்றும் தமிழ் மக்களுடைய போராட்ட உணர்வு இது நாள் வரையில் முஸ்லிம்களைப் பாதுகாத்துள்ளது என்ற செய்தியை அந்த பெண்மணியிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்னிலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ் பேரூந்து நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே வடமகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்த தகவலை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக