18 ஜூன் 2014

வறுமையால் மாணவன் தற்கொலை!

வறுமை காரணமாக 16 வயதேயான பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். தூக்கில் தொங்கிய நிலையில் அவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வன்னி இறுதி யுத்தத்தின் பின்னராக இடம்பெற்று வந்திருந்த நிலையில் வடமராட்சியின் கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் வசித்து வந்திருந்த நிலையினிலேயே அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். கருணாகரன் நிம்சன்(வயது 16)எனும் கரவெட்டி ஞானசாசிரியார் கல்லூரி மாணவனே திங்கட்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
குறித்த மாணவனது தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் மூத்த போராளியாக இருந்தவரெனவும் புனர்வாழ்வின் பின்னதாக விடிவிக்கப்பட்ட அவர் மீண்டும் மாவீரர் தினத்தை முன்னிட்டு துண்டுபிரசுரங்களை ஒட்டியதாகக் கைதாகி மீண்டும் புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டதாக தெரியவருகின்றது. முன்னாள் போராளியான தனது தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்திருந்த நிலையில் தாங்கள் வசித்து வந்த குறித்த கொட்டில் வீட்டில் தூக்கில் தொங்கி அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். ஊர் மக்களது உதவியுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளது. மகனது இறுதிக்கிரியைகளில் பங்கு பற்ற தந்தையை இராணுவம் அனுமதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக