24 ஜூன் 2014

வடகொரியா,சிரியா,ஈரான் வரிசையில் இலங்கை!

News Serviceஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் தெரிவித்துள்ளார். ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
நீண்ட கால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட இலங்கை, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிரியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் பட்டியலில் இணைந்து கொள்ள எத்தனிப்பது வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்த ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் மேம்பாடு ஏற்படவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
விசாரணைகளின் மூலம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என்ன நேர்ந்தது என்பது பற்றி புரிந்துகொள்ள இலங்கைக்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டும். யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சிறந்த அனுபவங்கள் உள்ளன. அந்த அனுபவங்கள் இலங்கையில் நல்லிணக்கத்ததை ஏற்படுத்த வழியமைக்கும் எனவும் காசியப் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக